Monday, March 16, 2009

நான்


காதல் குழந்தையின் சிரிப்பு, தாயின் முத்தம், கோடை மழை, மழைநாள்வெயில், பெண்மை பற்றிய புரிதல், ஒரு ஏழை விவசாயியின் முதுமைச் சுருக்கம்...

வெறுப்பு மரணித்துப் போகும் என் ஆன்மா பற்றி நினைக்கையில், ஒரு பெண்ணின் புனர்தலுக்காய் அவள் காலடியில் என் காதலை மண்டியிட வைக்கிறேனே அப்போது.

சிந்தனை நீண்டு விசாலித்துப்போகும் நெடும்பாதை வெளி.. .. ..

நம்பிக்கை எங்கோ என்னுடன் பயணப்படும் தொலை நிலாவொன்றை காண்கையில் அழுகைதான் வருகிறது.. .. ..

உணர்தல் சாந்தப்படும் பின் இரவு தனிமையில் நான்.. .. ..

எண்ணம் நரம்புகள் சூல் கொள்கிறது பெண்மையும் ஆண்மையும் சேர்ந்தே செத்துப் போகிறது செத்துப் போகட்டும் விடு.. .. ..

No comments:

Post a Comment